எதற்கும் துணிந்தவன் படம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

0

முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா.

இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “எதற்கும் துணிந்தவன் ” என்ற திரைப்படமாகும்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் குறித்த படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் இருக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா, பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் அண்மைய நாட்களில் இப்படத்தின் பஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் பிரகாரம் பெப்ரவரி 4ஆம் திகதி குறித்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது,

அதன் பிரகாரம் தணிக்கை துறை இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கி உள்ளது.

மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply