சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை.

0

இலங்கையில் தற்போது சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகிப்பதற்கு தேவையான கேஸ் சிலிண்டர்கள் உள்ளன.

இதன் பிரகாரம் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்திலிருந்து தட்டுப்பாடின்றி கேஸ் விநியோகிக்கப்படும் என்ற நிறுவனம் அறிவித்திருந்தது.

இருப்பினும் கடந்த காலங்களில் நாளாந்த கேஸ் சிலிண்டர்களுக்கான கேள்வி சுமார் 2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த எண்ணிக்கை தற்போது 90 ஆயிரம் ஆகக் காணப்படுகின்றது.

Leave a Reply