விடுதியில் இருந்த முப்பத்தி மூன்று பெண்கள் அதிரடி கைது.

0

தற்போது நாட்டில் கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற போதை களியாட்டத்தில் கலந்து கொண்டிருந்த 33 பெண்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் கடவத்தை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

மேலும் களனி பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் அதிகாலை 3 மணி அளவில் இந்த விடுதி சுற்றி வளைக்கப் பட்டது.

குறித்த சுற்றிவளைப்பின் போது அந்த விடுதியில் 33 பெண்கள் இருந்ததாகவும் , அவர்கள் அனைவரும் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply