இலங்கையின் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலவாணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுகட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியால் வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான தகவல் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் வெளியாகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இலங்கை வர்த்தக வங்கிகளில் உள்ள வெளிநாட்டு நாணய வைப்பாளர்களின் கணக்குகளில் உள்ள வைப்பு தொகையில் 25 சதவீத உள்ளூர் நாணயங்களாக மாற்றப்பட வேண்டும் என மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது



