தமிழகத்தில் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை.

0

தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

அத்துடன் கடந்த ஆண்டு கொவிட் பரவலின் போது தமிழக சிறையில் பார்வையாளர்களை சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கொவிட் பரவல் குறைவடைந்தது அடுத்து அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மீண்டும் பார்வையாளர்கள் வழக்கம் போல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறைச்சாலைகளில் குறித்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முழு சுகாதாரத்தையும் பேண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply