சுகாதார தொழிலாளி மீது தாக்குதல்.

0

சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்குரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஊழியர்கள் படி பகிஸ்கரிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது நடைபாதையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முற்பட்ட வேளையில், குறித்த வியாபாரியால் வருமான வரி பரிசோதகர் , சுகாதார பரிசோதகர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிரதேச சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையில் தவிசாளர் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த பகுதியில் இன்றும் தொடர்ந்து வியாபாரம் நடைபெறுவதாக தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply