பிறந்துள்ள புத்தாடை நாட்டை திறந்த நிலையில் வைத்திருக்கவும், இயல்பு நிலையில் பராமரிக்கவும் அனைத்து மக்களும் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் புதிதாக அடையாளம் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான 41 பேருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகதிர சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 41 ஒமிக்ரோன் தொற்றாளர்களில் 7 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களாகும்.
மேலும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டலுக்கமைய செயற்படுமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



