அடுத்த ஆண்டில் பாரிய மின் தடை ஏற்படும்.

0

எதிர்வரும் ஆண்டில் பாரிய மின்தடை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக இலங்கை மின்சார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலரை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம் வரும் ஜனவரி 24ஆம் திகதி வரை எரிபொருள் இருப்பது தொடர்பில் மின்சார சபைக்கு பிரச்சனை இல்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதியை இலங்கை மின்சாரசபை பெற முடியாவிட்டால் மின் உற்பத்தியில் பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply