பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக புதிதாக எடுக்கப்பட்ட கார்.

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் பிரதமரின் சுற்றுப் பயணங்களின் போதும் அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் பிரகாரம் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மெர்சிடிஸ் மெபெக் எஸ் 650 ரக கார் வாங்கப்பட்டுள்ளது.

குறித்த காரில் வி. ஆர்.10 லெவல் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த கார்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் இது போன்ற 2 கார்களை வாங்கி உள்ளனர்.

ஒரு காரின் விலை 18 கோடி ஆகும்.

இருப்பினும் இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கார் நிற்கும் இடத்திலிருந்து 2 மீட்டர் சுற்றளவில் சுமார் 15 கிலோ எடையுள்ள வெடிகுண்டு வெடித்தாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆதலின் காரின் கண்ணாடிகள் துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டது.

மேலும் காரின் உள்ளே பாலிகார்பனேட் பூச்சு பூசப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடுகள் சுட்டாலும் காருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

மேலும் பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக ஒரு பெற போது அவருக்கு பி எம் டபிள்யூ 7 சீரிஸ் ரக கார்களையே பயன்படுத்தினார்.

அதன் பின்னர் லேண்ட் ரோவர் ரக கார்களில் பயணம் செய்தார்.

தற்போது மெர்சிடிஸ் மெபெக் எஸ் 650 ரக கார்களுக்கு மாறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply