தொடருந்து நிலைய அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தொடருந்து திணைக்களத்திற்கு நாளாந்தம் சுமார் 10 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தொடர்ந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையால் பயணச் சீட்டு விநியோகம் மற்றும் பொதிகளை பொறுப்பேற்றல் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ள மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி தொடர்ந்து நிலைய அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் நாளை நள்ளிரவு முதல் அனைத்து துறைகளிலும் இருந்து விலகி, தொடர் பணிப்புறக்கணிப்பு ஈடுபட்டுள்ளதாகவும் தொடர்ந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



