மகாராஷ்டிராவில் கிறிஸ்மஸ், புத்தாண்டை கொண்டாடுவதற்கு கட்டுப்பாடு.

0

இந்தியாவில் தற்போது 236 பேர் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மாநிலங்களும், யூனியன் பிரதேசம் கடும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் பிரகாரம் மகாராஷ்டிராவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.

அத்துடன் கிறிஸ்மஸ்,புத்தாண்டை வழிபாட்டு தலங்களுக்கு வெளியையும், உள்ளேயும் எளிமையாக கொண்டாட வேண்டும்.

24 மற்றும் 25 ஆம் திகதிகளில் இரவில் நடக்கும் பிரார்த்தனைகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் 50 சதவீதமானோர் மாத்திரம் பங்குகொள்ள முடியும்.

மேலும் ஆலயங்களுக்கு வெளியில் கடைகள் போடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதிக மக்கள் ஒன்றுகூடும் வகையில் பேரணி ஊர்வலங்கள், வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply