அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிறார்.
ரஜினியின் புதிய படத்தை இயக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஆகவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பேசினார்.
இதனால் ரஜினியின் புதிய படத்தை அவர் இயக்கலாம் என்று கூறப்பட்டது.
மேலும் சில இயக்குனர்களையும் அழைத்து கதை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிங்கு பெரியசாமியுடன் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் , ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், படையப்பா, லிங்கா படங்களை இயக்கிய கே.எஸ் ரவிக்குமார் மற்றும் வெங்கட் பிரபு, தாடி ராஜா ஆகியோர் பெயர்களும் அடிபட்டன.
குறித்த பட்டியலில் தற்போது பிரபல இந்தி இயக்குனர் பால்கியும் இணைந்துள்ளார்.
பால்கி சமீபத்தில் ரஜினியை சந்தித்து ஒரு கதை சொன்னதாகவும் அந்தக் கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் எனவே பால்கி இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
மேலும் பால்கி இயக்கத்தில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



