தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டை நிர்மாணிக்க நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த நிதி உதவி வழங்கும் செயற்பாடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கண்டி மாவட்டத்திற்கு 50,000 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று நாவலப்பிட்டியில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது 757 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்திய மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை தற்போது இலாபகரமானதாக மாறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ தேயிலைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 65 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



