யாழ் தீவுகளில் மின் உற்பத்தியா?- சீனத் தூதுவர்.

0

யாழ்ப்பாண தீவுகளில் சீன நிறுவனத்தினால் தொடங்கப்படவுள்ள மின் உற்பத்தி திட்டங்கள் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ் மக்களுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் சீனா மிக அக்கறையோடு செயற்படுகின்றது.

இந்நிலையில் வடக்கில் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதிலும் சீனா மிக ஆர்வமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சீனாவின் இந்த விருப்பங்களை சில தரப்புகள் சந்தேகத்துடன் நோக்குவது எமக்கு கவலை அளிக்கின்றது.

மேலும் சீனாவின் இந்த விருப்பத்திற்கு பின்னால் எந்தவித இரகசிய நோக்கங்களும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாழ் தீவுகளில் சீன நிறுவனத்தினால் தொடங்கவுள்ள உத்தேச மீள்பிறப்பாக்க வலுசக்தி மின் உற்பத்தி திட்டங்களை அந்த நிறுவனங்கள் கைவிட்டன என அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனால் அந்த செய்திகளில் எந்த விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply