ஏழு பயிர்களுக்கான விதைகளின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை.

0

ஏழு பயிர்களுக்கான விதைகளின் இறக்குமதியை எதிர்வரும் ஆண்டில் மட்டுப்படுத்த அவதானம் செலுத்தப்படுவதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழங்கு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், மிளகாய், உளுந்து, சோளம் மற்றும் நிலகடலை முதலான பயிர்களின் விதைகளையே நாட்டில் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டம் தற்போது சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply