யாழ் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிக்கப்படும் இடத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய குறித்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 6:45 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது



