ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட Toyota Land Crusher 300 அதிநவீன வாகனம் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வாகனம் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் வாகனங்கள் இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிநவீன வாகனம் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் அதிக கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் அமெரிக்க தூதரகத்தில் இந்த வாகனம் வரி இன்றி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் இடை நிறுத்துவது தூதரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார்.



