தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.

0

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பொழிந்து வருகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் நேற்றைய தினம் புயலாக வலுப்பெற்றது.

இதற்கு ஜாவத் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இது இன்று காலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடலோர பகுதியை அன்னிக்கும் என்றும் அதனைத் தொடர்ந்து வடக்கு- வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டி நகரும் என்று வானிலை ஆய்வு மையத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதன் பிரகாரம் கன மழை காரணத்தால் மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாமக்கல், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மாத்திரம் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply