பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் வெளியான தகவல்.

0

பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இது வரையில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அம்முனுகம குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என லங்கா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன விடுத்துள்ள கருத்துக்குப் பதில் வழங்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது பேருந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரமற்றவை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, காவல்துறை மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இருப்பினும் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, தனியார் பேருந்துகளில் 25 சதவீதமானவை மண்ணெண்ணையில் இயங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply