மூன்று வருடங்களின் பின்னர் இலங்கையில் மீண்டும் மலேரியா.
காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு தொற்றாளராக அடையாளங் காணப்பட்ட நபர் உகண்டாவில் பணியாற்றி மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கையைத் திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த 27 ம் திகதி அவசர சுவையினம் காரணத்தால் அவர் உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மலேரியா நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இலங்கையில்இறுதியாக கடந்த 2012ஆம் ஆண்டில் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.