பெண்ணை கொடூரமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்.

0

ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்.

காணி தகராறு காரணத்தினால் பெண் ஒருவரையும் அவரது மகனையும் காவல்துறை உத்தியோகத்தரும் , அவரது மனைவியும் இணைந்து தாக்கியமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இதற்கமைய குறித்த சம்பவம் மாத்தறை -கம்புறுபிட்டிய , பண்டாரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு காயமடைந்த பெண் தற்போது கம்புறுபிட்டிய
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

அத்துடன் அவரது தலை மற்றும் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக இன்று மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் நாம் வினவிய போது சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கறுப்புப்பெட்டி காவல்துறையினர் தெரிவித்தனர் .

அவ்வாறு கம்புறுபிட்டிய காவல் நிலையத்திற்கு முறைப்பாடு சென்றபோது காவல்துறையினர் முறைப்பாடுகளை ஏற்க மறுக்கிறதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply