மலேரியா தடுப்பு தெளி கருவி இயக்குனர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்வோரை கௌரவிக்கும் நிகழ்வு.

0

திருகோணமலை மாவட்ட மலேரியா ஒழிப்புப் பிரிவில் தெளி கருவி இயக்குனர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றும் செல்லும் நபர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.

கிழக்கு மாகாண தெளிகருவி இயக்குனர் இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (01) திருகோணமலையில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனை மண்டபத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சுமார் 30 நபர்களுக்கு நினைவுச் சின்னம்,அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கலந்து சிறப்பித்தார்.

மலேரியா தடுப்பு பிரிவில் தெளி கருவி இயந்திர இயக்குனர்களாக பல வருட காலம் சேவையாற்றி ஓய்வு நிலை பெறும் ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply