தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

0

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் குழுவினால் அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மின் சூள் கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பான கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஆணையாளர் புஞ்சிஹேவா , தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திரா சாப்டருக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் காட்சிகள் , தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் காட்சிகள், தேசிய அரங்கில் ஒன்று சேர வேண்டும் என்ற பேரவா முதல் முஸ்லிம் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி இருப்பதை அறிய முடிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு எமது மக்களின் இந்த மன உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து முழு நாட்டுக்கு முன்மாதிரியாக நாம் நிற்கின்றோம்.

ஆகவே எங்கள் மின்சூள் சின்னம் நாடுபூராகவும் இருளை அகற்றி ஒளி பாய்ச்சும் இயக்கமாக இன்னமும் முன்னேற்றம் பெற , அனைத்து உடன்பிறப்புகளினதும் , இரதங்களினதும் வாழ்த்துக்களையும , ஆதரவுகளையும் எதிர்பார்க்கின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply