பாடசாலையை மூட வேண்டிய நிலை ஏற்படும்.

0

பாடசாலைகளில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலை திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை.

இதன் பிரகாரம் முறையான திட்டம் வகுக்க படாவிட்டால் மீண்டும் பாடசாலையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைகள் அனைத்தும் அண்மையில்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே தொடர்ந்தும் பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply