கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

0

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 மாணவர்கள் உள்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலார் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் நாளைய தினம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனாவின் மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் கிளிநொச்சி பொது வைத்தியசாலை ஆகிய இடங்களில் இவ் தடுப்பூசி ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply