இரண்டு இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் பூர்த்தியான 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் நடமாடும் சேவை மூலம் மூன்றாவது தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி செயலணி கூட்டத்திலும் ஜனாதிபதியின் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இரு தடுப்பூசிகளையும் பெற்று ஒரு மாதம் பூர்த்தியான 20 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசியை செலுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.