கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் அதிரடி கைது.

0

இரு வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய மட்டக்குளி மற்றும் ராகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கிலோ 542 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலையில் காவலரனியில் கடமையாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வரகாபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான காவல்துறை உத்தியோகத்தரிடமிருந்து 4 கிலோ 191 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி சுமார் 30 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply