இலங்கையில் கொவிட் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த இருபத்தி மூன்று நாட்களில் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 470 பெருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று வரை குறித்த கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பைத்தியர் ரி.வினோதம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் உரிய வகையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.