பொலன்னறுவை- மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில். இருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதற்கமைய குறித்த விபத்து சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் டிப்பர் ஒன்றும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்து சாரதியும் அதில் பயணித்த நபருமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.