கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து மனநிறைவோடு திருப்தியோடு எந்த ஒரு விஷயத்தை நினைத்தாலும் சரி அது உடனே நடக்கும்.
தம்பதிகளாக இறைவனிடம் வைக்கும் வேண்டுதலுக்கு உடனே பலன் உண்டு.
கருத்து வேறுபாடுகள் இல்லாத, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட தம்பதிகள் வீட்டில் இருந்தால், நிச்சயமாக அந்த வீடு கோவிலாகத்தான் இருக்கும்.
அந்த வரிசையில் தம்பதியாக இருந்து வீட்டில் இந்த ஒரு பூஜையை மட்டும் செய்தால் போதும்.
வீட்டில் இருக்கும் வறுமை நீங்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் பொங்கி வழியும். சண்டை சச்சரவுகள் குறையும்.
குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறையும்.
வாழையடி வாழையாக குடும்பம் தழைத்தோங்கும்.
நம்முடைய இல்லற வாழ்க்கையை இன்னும் இனிமையாக மாற்றப் போகும் அந்த பூஜையை பற்றிய விரிவான விளக்கம் உங்களுக்காக இதோ.
வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும்.
இந்த பூஜைக்கு நமக்கு தேவையான பொருட்கள் 2. மருதாணி விதை, லவங்கம்.
மருதாணி விதை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். லவங்கம் 11 என்ற கணக்கில் எடுத்துக்கொண்டால் போதும்.
எப்போதும் போல வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டு பூஜை அறையை எப்படி அலங்காரம் செய்வீர்களோ அப்படி அலங்காரம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தீபங்களை ஏற்றி வைத்து விடவேண்டும்.
வாசம் மிகுந்த தூபம் கட்டாயம் இருக்க வேண்டும்.
அதன் பின்பு கணவனும் மனைவியும் பூஜை அறையில் இறைவனை பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும்