இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்கரைப்பகுதியில் பாதுகாப்பை பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள்ளார்.
இதற்கமைய குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியைப் பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
மேலும் ஒரு மாத காலத்துக்கு அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.