கடலரிப்பால் அழிவடையும் குடியிருப்பு பகுதி.

0

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கடற் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் பாரிய இடர்களை எதிர்கொள்கின்றனர்,

கருவாட்டு வாடி உற்பத்தியாளர்களின் பெறுமதியான தொழில் தளங்கள் கடலுக்கு இரையாவதோடு மற்றும் பெறுமதியான அரச பொதுக்கட்டடங்களும் நாளாந்தம் சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மூதூர் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, சுமார் இது வரைக்கும் 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் உட் புகுந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அண்மைக்காலமாக மூதூர் பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால், அதனைத் தடுக்கும் ஆரம்ப நடவடிக்கையாக முதன் முதலாக கடந்த 2003 காலப்பகுதியில் கரையோரைப் பகுதிகளில் கற்கள் நிரப்பப்பட்டு, கம்பியிலான கூடுகளில் கற்கள் இடப்பட்டு கடற் கரையிலிருந்து கரையினை நோக்கி 70 மீற்றர் வரையான பகுதிகளில் நிலத்தினை தோண்டி கற்கூடுகள் நிலத்தில் உள்ளீர்க்கப்பட்டன ஆனால் அது வெற்றியளிக்க வில்லை.

இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Leave a Reply