இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளில் முறையான ஆய்வுகள் மூலம் கண்டெடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ ஆர். பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவதே மற்றும் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் ஆகியோருக்கு இவ்வாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் சில வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியுள்ள போதிலும், அவற்றில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பில் உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த விதிகள் தொடர்பாக ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



