தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.

0

தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் எதிரொலியினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று 20 செ.மீட்டருக்கு மேல் அதிக கனமழை பெய்யும் என்பதால் சிவப்புச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

மேலும் இதுதீவிரமடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருவதால் கரையை கடக்கும் திசையில் மாறுபாடு ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply