கிளிநொச்சியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்.

0

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த சடலம் வெட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் தற்காலிக கொட்டகைக்குள் வெட்டு காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply