கோர விபத்தில் உயிரிழந்த 17 வயது சிறுமி.

0

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அருகில் இன்று காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி ஊற்றுபுலம் பாடசாலையில் க.பொ. த சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவிகள் மூவர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெற சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவிகள் வீதி கடக்க முற்பட்டதால் மேற்படி டிப்பர் பாதசாரி கடவையை அண்மித்து நிறுத்தப்பட்டிருந்ததுடன் அதற்குப் பின்னால் வந்த மற்றுமொரு டிப்பர் வாகனமும் நிறுத்தப்பட்டது.

அந்த வாகனத்திற்கு பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று குறித்த டிப்பரை மோதியதை அடுத்து அது முன்னால் நிறுத்தப்பட்ட அந்த பட்டாரக டிப்பரை மோதியுள்ளது.

இதன்பின்னர் குறித்த இரு டிப்பர்களும் வீதியை கடக்க முற்பட்ட மாணவிகள் மீது மோதியதில் 16 வயதான மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனறர்.

Leave a Reply