அடுத்த வருடத்துக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த பாதீடு இன்று பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடு இதுவாகும்.
அவ்வாறு பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி 7 நாட்களுக்கு இடம் பெறுவதுடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் தேதி இடம்பெறவுள்ளது.
மேலும் பிற்பகல் 2 மணிக்கு பாதீட்டு உரை ஆரம்பமாகவுள்ளதுடன் இலங்கையின் 76வது பாதீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.