கடலூர் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலமைச்சர்.

0

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்களாக சென்னையில் மழை பாதிப்புகளை தினமும் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கி விட்டார்.

இந்நிலையில் இன்று மாலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடலூர் புறப்பட்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்து மக்கள் தவிக்கின்றனர்.

மேலும் கடலூர் செல்லும் மு க ஸ்டாலின் அங்கு இரு நாட்கள் தங்கி இருக்கவும் வெள்ள பாதிப்புகளை டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று பார்வையிடவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply