பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்நாளை முதல் யாழ் பல்கலை கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமாக உள்ளது.

அத்துடன் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இது தொடர்ந்தும் 12 மற்றும் 15ம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் தடுப்பூசி செலுத்தப்படும் தினங்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

மேலும் ஒக்டோபர் மாதம் சினோபார்ம் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply