கன்னட திரையுலகின் பிரபல நடிகர்வ் புனித் ராஜ்குமார் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
இதற்கமைய நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இவரது மறைவு கன்னட திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகில் மாபெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடலுக்கு பொதுமக்கள், திரையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் புனித் ராஜ்குமார் நல்லடத்திற்கு பின்னர் நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உட்பட தமிழ் நடிகர்கள் பலரும் அவரது குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை புனீத் என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.