நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய யாழ் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும், மன்னார் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க மாவட்ட அரசாங்க அதிபர்கள் தீர்மானித்தனர்.
இதன் பிரகாரம் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு மாகாண ஆளுநரின் அங்கீகாரத்துடன் மாவட்டங்களின் அரசாங்க அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.