படப்பிடிப்பு நிலையங்களுக்கு செல்லும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு.

0

நாடு பூராகவும் உள்ள படப்பிடிப்பு நிலயங்களில் படம் பிடிப்பதற்கு வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றுப் பாரவல் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதற்காக படங்களை எடுத்து செல்வதனால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக படம் எடுப்பதற்கு அதிகளவானோர் வருகை தருவதாக கொழும்பு மாவட்ட தொழில் முறை படப்பிடிப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் 10 பேர் படப்பிடிப்பு நிலையங்களுக்கு செல்வார்களாயின் தற்போது 50 பேர் அளவில் செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply