சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடு நாளை மறுதினம் ஆரம்பிக்க நடவடிக்கை.

0

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கற்பித்தல் செயல்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை மறுதினம் குறித்த வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

அத்துடன் தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் தரங் களுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு கொவிட் 19 தடுப்பு செயலணி பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தால் இரண்டு வருடகாலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டத்தையடுத்து கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்ப பிரிவுகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை 50% கொள்ளவில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply