இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுளள்து.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும்.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலும் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அவ்வாறு ஊவா, சப்ரகமுவ , மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply