மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 79,797 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2,550 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் , 15,165 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
12,817 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 3,679 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அவ்வாறு 44,511 பேருக்கு பைசர் தடுப்பூசியும்,, 1,012 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி 28 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.