ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் தொடருந்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை.

0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் தொடருந்து தொழிற்சங்கங்களை சந்திக்கவுள்ளனர்.

இதற்கமைய குறித்த சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல தனியார் பிரிவு தொழிற்சங்கங்களுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின் போது தங்களது வேதனை பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசப்பட உள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply