இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து காணப்படும்.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply