பசறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 பேரின் உயிரை மாய்த்த பேருந்து சாரதி மரணம்.

0

பதுளை – லுணுகலை வீதியில்
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி பசறை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் சாரதி திடீரென மரணமடைந்துள்ளார்.

இதற்கமைய இவர் தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது குறித்த மரணத்திற்கு காரணம் மாரடைப்பு ஏற்பட்டமையே என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply