மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்கள் தமது மக்களின் பிரச்சினைகளை இன்னொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் தீர்க்க வேண்டும் _கிழக்கு ஆளுனர்.

0

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்கள் தமது மக்களின் பிரச்சினைகளை இன்னொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் தீர்க்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் தெரிவித்தார்.

அப்படிச் செய்தால்தான் ஓய்வுக்குப் பிறகு மனசாட்சிப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றார் ஆளுநர்.

கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக நேற்று (26) அம்பாறையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் உரையாற்றுகையில்

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும். நான் சென்றேன் கடந்த ஒரு நாள் மட்டக்களப்புக்கு சென்ற போது ஏறாவூர் பிரதேச சபையில் நடந்த ஒரு சம்பவத்தை கண்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.

இரண்டு வருடங்களாக எனக்கு அந்த பிரச்சினை உள்ளது.முடிவெடுப்பதில் கட்சி பேதமின்றி நாம் ஒருபோதும் பாரபட்சம் காட்டக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.எல்.பண்டாரநாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி மதநாயக்க, அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்

Leave a Reply