மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 4,746 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 40,568 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 2,352 பேருக்கு அகொவிசீல்ட் இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அவ்வாறு 68,586 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 695 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி 240 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.